• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாரச்சந்தைகள் இயக்குவதற்கு தடை ..!

June 10, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகளில்
பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசல்கள்
மிகுந்து காணப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வரப்பெற்று வருகிறது. இதனடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்
ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., உத்தரவின்படி,மாநகராட்சிப்பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாத காரணத்தினாலும், கொரானா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்கள் போதிய சமூக இடைவெளியினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.

மேலும் படிக்க