• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர் வீட்டில் திருட முயற்சி- சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை

May 22, 2018 தண்டோரா குழு

கோவை அடுத்த சோமனூரில் பெண் வழக்கறிஞர் வீட்டில் இளைஞர்கள் இருவர் திருட முயற்சிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியதை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோமனூர் ரயில்வே பாலத்தின் அருகில் வசித்து வரும் மில் உரிமையாளரான பழனிச்சாமி,அவரது மனைவி,வழக்கறிஞராக பணியாற்றி வரும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது,நள்ளிரவு, ஜன்னல் வழியாக வீட்டினுள் உள்ளவற்றை நோட்டமிட்டு,பின்பு கதவை உடைக்க முயற்சித்துள்ளனர்.அப்போது வெளியில் உறங்கிக்கொண்டு இருந்த பழனிசாமி கதவை உடைக்கும் சப்தம் கேட்டு எழுந்துள்ளார்.கதவை உடைக்க முடியாமல் சுவர்மேல் ஏறி பந்தலை பிரித்து அதன் வழியாக இறங்க முயற்சித்ததை கண்ட பழனிச்சாமி கூச்சலிட்டார்.இதனையடுத்து திருட வந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இவை அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, ரோந்து காவலர் வந்து விசாரனை நடத்தி சென்றுள்ளனர்.இதுவரை திருட்டு முயற்சி நடந்த வீட்டிலிருந்து யாரும் புகார் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும்,புறநகர் பகுதியில் நடந்த சம்பவம் என்பதால் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க