• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரித் தொகை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

March 13, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வரித்தொகை நிலுவை வைத்ததாக 9 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சியினர் துண்டித்து உள்ளனர். இந்த நடவடிக்கை தொடறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்துவரி குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரித் தொகைகளின் வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வழக்கமாக உள்ள 29 வரி வசூல் மையங்கள், விடுமுறை நாட்களில் சிறப்பு மையங்கள் அமைத்து வரித்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.வரித்தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் பல்வேறு மண்டலப் பகுதிகளில் இருந்து மொத்தம் 9 குடிநீர் இணைப்புகள் ஒரே நாளில் துண்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த வித வரியும் செலுத்ததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வரி செலுத்தாத 35 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க