• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள நடமாடும் விழிப்புணர்வு வாகனம் – மாவட்ட ஆட்சி தலைவர்

November 7, 2017 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவைர் அலுவகத்தில் இன்று (07.11.2017) குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், டெங்கு காய்ச்சல்
தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து கூறுகையில்,

“கோயம்புத்தூர் மாவட்டத்தில் பில்லூர் மற்றும் சிறுவாணி குடிநீர் திட்டப்பகுதிகளிலுள்ள ஊரக பகுதிகள் மற்றும் கரையோர கிராமங்களில் வடகிழக்கு பருவமழையின்போது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், பேரிடர்களின் போது துரித நடவடிக்கை
மேற்கொள்ளவும் இவ்வாகனம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாகனங்களில் 30 நபர்கள் கொண்ட குழு தினந்தோறும் கிராமப்பகுதகிளில் ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களிடையே டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள்.

மேலும்,சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டத்தில் திடீரென உடைப்பு தொடர்பான புகார்கள் பெற்றவுடனடியாக நிவர்த்தி செய்யும். இவ்வாகனம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருப்பதுடன், தடையில்லா குடிநீர் வழங்கவும் உறுதுணையாக இருக்கும்”. இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க