• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தினர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்த கோரி மனு

June 25, 2021 தண்டோரா குழு

கோவையில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தினர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்த கோரி, ஆர்.ஜி.வீதியில் உள்ள S.S.J.S.M கோவில் கமிட்டி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

கோவையில் ஜவுளி,எலக்ட்ரிகல்,என பல்வேறு துறைகளில் ஜெயின் சமூகத்தினர் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வணிகம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜெயின் சமூகத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த S.S.J.S.M கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஜெயின் கோவில் அறக்கட்டளை சார்பாக மனு வழங்கப்பட்டது.

தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர் நரேஷ் ஜெயின் தலைமையில், ஜெயின் கோவில் யூத் சங்கத்தின் தலைவர் ஸ்ரீபால் ஜெயின், ஜிட்டோ செயலாளர் பேரு ஜெயின்,மற்றும் உறுப்பினர் முகேஷ் சங்வி ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கொரோனா காலங்களில் ஜெயின் அறக்கட்டளை வாயிலாக விழிப்புணர்வு பேனர்கள் அமைப்பது, நிவாரண பொருட்கள் வழங்குவது மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்குவது என கொரோனா காலத்தில் ஜெயின் சமூக மக்கள் முன்கள பணியாளர்களை போல சமூக பணியாற்றியதாகவும்,குறிப்பாக வடவள்ளியில் உள்ள அண்ணா பல்கலை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தனர்.

ஆதலால் மாவட்ட நிர்வாகம் ஜெயின் சமூகத்தினர் மற்றும் அறக்கட்டளையினருக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்க இந்த மனுவை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க