• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தீவிரம்

December 26, 2020 தண்டோரா குழு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் மு ந்திரி, 20 கிராம்
உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 10 லட்சம் ரேஷன் கார்டுதார்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி கோவை மாநகரில் சுங்கம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் என மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி ரேஷன்கார்டு தாரர்களுக்கு டோக்கன்
விநியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் முதல் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து கோவை வழங்கல் துறை
அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 47 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் அரிசி ரேஷன்கார்டுகள் 10 லட்சத்து 9 ஆயிரம் பேர் வைத்து உள்ளனர்.இவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுடன் ரூ.2,500
வழங்கப்படுகிறது.எனவே இவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று துவங்கி வருகிற 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க