• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தீவிரம்

December 26, 2020 தண்டோரா குழு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் மு ந்திரி, 20 கிராம்
உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 10 லட்சம் ரேஷன் கார்டுதார்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி கோவை மாநகரில் சுங்கம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் என மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி ரேஷன்கார்டு தாரர்களுக்கு டோக்கன்
விநியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் முதல் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து கோவை வழங்கல் துறை
அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 47 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் அரிசி ரேஷன்கார்டுகள் 10 லட்சத்து 9 ஆயிரம் பேர் வைத்து உள்ளனர்.இவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுடன் ரூ.2,500
வழங்கப்படுகிறது.எனவே இவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று துவங்கி வருகிற 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க