• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

April 19, 2021 தண்டோரா குழு

கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தண்டவாளம் அருகே பொதுமக்கள் சிலர் சென்றுகொண்டிருந்தபோது
அப்போது உடல்கள் சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் ஜோடிகள் இன்று அதிகாலை இருகூர் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த
போலீசார் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க