• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரஜினியின் உருவ படத்தை கிழித்து போராட்டம்

January 23, 2020 தண்டோரா குழு

பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்தினை கண்டித்து, கோவையில் ரஜினியின் உருவ படத்தை கிழித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971 ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செதருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தினை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக, திவிக, விசிக, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது ரஜினியின் உருவபடத்தை கிழித்து போராட்டம் நடத்தினர். பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்த் ஆதாரமற்ற கருத்தினை கூறியிருப்பதாகவும், அவரது கருத்தினை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்தப்படுமென போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க