• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மேம்பாலத்திற்கான வரைபடத்தை மாற்றாமல் செயல்படுத்த வேண்டும் – நா.கார்த்திக்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம்,உக்கடம் வழியாக ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டக்கூடிய பணிகளை ஏற்கனவே அரசினால் வெளியிடப்பட்ட வரைபடங்களை மாற்றி அமைத்து கட்டக்கூடாது என சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கேரளா மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கோவைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடமான ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால்  தற்போதையை அரசு தேர்தலை மனதில் வைத்து மக்களுக்கு பயன்படாத வகையில் கரும்புக்கடை பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் கட்ட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

காந்திபுரத்தில் ஏற்கனவே திட்டமிட்ட மேம்பால வரைபடத்தை மாற்றி வேறுமாதிரி கட்டியதால் தற்போது காந்திபுரம் மேம்பாலம் பயனற்று கிடக்கிறது.அதனால் இந்த மேம்பாலத்திற்கான வரைபடத்தை மாற்றாமல் செயல்படுத்தினால் தான் மக்களுக்கு பயன்பெறும் அதே வேளையில் பெருமளவிலான போக்குவரத்தையும் குறைக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க