• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மண் பரிசோதனை

November 24, 2021 தண்டோரா குழு

கோவையில் 144 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் திட்ட செயல்படுத்துவது தொடர்பாக aஅண்மையில் சர்வே பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மண் பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில் கணியூர் முதல் உக்கடம் வரை 26 கி.மீ. தூரத்திற்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கி.மீ. தூரத்திற்கும், கணேசபுரம், காருண்யா நகர் முதல் உக்கடம் வரை 44 கி.மீ. தூரத்திற்கும், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் முதல் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வரை 8 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தமாக 144 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கும் வகையில் அண்மையில் சர்வே பணி நடைபெற்றது.

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே, அவினாசி சாலை வழிகள், பெரியகடை வீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சர்வே பணிகள் சார்டிலைட் உதவியுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவையில் காந்திபுரம், அவினாசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மண் பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண் பரிசோதனை பணிகளை முடிந்ததும் முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க