• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஆய்வு பணிகள் துவக்கம் – முதல்வர் பழனிச்சாமி

February 14, 2021 தண்டோரா குழு

கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் பெற்ற விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்திற்கு புதிய திட்டங்களை துவங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி. பிரதமர் துவங்கி வைக்கும் திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். பிரதமரின் நடவடிக்கையால் கொரோனா தொற்று விரைவாக தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் முதலீட்டாளர்களை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டிய பிரதமருக்கு நன்றி.மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி.கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க