• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

December 4, 2021 தண்டோரா குழு

கோவை கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் (70). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்தனர். அந்த வாலிபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாயம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயம்மாள் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தாயம்மாள் தனது பேரன் ரங்கநாதனை அழைத்து சென்று கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க