• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி

December 21, 2021 தண்டோரா குழு

கோவை வடவள்ளியில் உள்ள மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமி (82) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவை வடவள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த ஜெயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

உடன், மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, செல்வி அக்கா, முரசொலி செல்வம், அருள்நிதி, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, பெரியகருப்பன், காந்தி, வெள்ளகோவில் சாமிநாதன், மெய்யநாதன், கீதா ஜீவன் மற்றும்

மாவட்ட பொறுப்பாளர்கள் மருதமலை சேனாதிபதி, நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், பகுதி கழக பொறுப்பாளர் வம.சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், ஐஜி சுதாகர், டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி.செல்வநாகரத்தினம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க