• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக கேஜி மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவின் பயிற்சி வகுப்பு

February 19, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 47 வருடங்களாக மருத்துவத் துறையில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேஜி மருத்துவமனை தற்போது தீவிர அவசர சிகிச்சை துறை சார்பில் ஒரு வருடம் செவிலியர் பயிற்சி பெறும் பயிற்சி வகுப்பினை ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சிக்கான சான்றிதழ்கள் கேஜி மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல் மாதம் பயிற்சி வகுப்பில் பயின்ற 14 செவிலியர் மாணவர்களுக்கு கேஜி மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி பக்தவச்சலம் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

47 வருடங்களாக தீவிர அவசர சிகிச்சை பிரிவில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேஜி மருத்துவமனை தற்போது புதுப்பொலிவுடன் அனைத்து விதமான தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் தீவிர அவசர சிகிச்சை துறை சார்பில் முதல் முறையாக பயிற்சி வகுப்புகள் செவிலியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் ஒரு மாதத்தில் கற்பிக்கப்படுகிறது. இதற்காக 15 பாட வகுப்புகளை 22 சிறந்த மருத்துவர்கள், 4 செவிலியர்கள் மற்றும் 5 எமர்ஜென்சி டெக்னீசியன்கள் உள்ளிட்டோர்கள் மூலம் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க