• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல்கட்டமாக 500 டவுன் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்

April 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் முதல் கட்டமாக 500 டவுன் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் பேருந்து பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசின் போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முதல்கட்டமாக சென்னையில் நகர பேருந்துகளில் சிசிடிவி கேரமாக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் டவுன் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் சுமார் 2100 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் முதல்கட்டமாக சுமார் 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க