• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன் முறையாக நடைபெறும் வைப்ரண்ட் கொங்குநாடு குளோபல் கோயமுத்தூர் கண்காட்சி

January 8, 2020 தண்டோரா குழு

கொங்குநாட்டு பகுதியில் பன்னோக்கு துறையில் உள்ள வணிகத்தை அதிகரிக்கும் பொருட்டு வைப்ரண்ட் கொங்குநாடு குளோபல் கோயமுத்தூர் கண்காட்சி மற்றும் மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளது.

கொங்குநாட்டு பகுதிகளான கோவை,ஈரோடு,திருப்பூர்,உள்ளடக்கிய மாவட்ட இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள்,உற்பத்தியாளர்கள், தொழில் நுட்பவியாளர்கள், சேவை அளிப்போர் மற்றும் வணிகர்கள் என அனைவரும் பயன்படும் வகையில் கோவை கொடிசியாவில் வரும் அக்டோபர் மாதம் வைப்ரண்ட் கொங்குநாடு குளோபல் கோயமுத்தூர் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இது குறித்து குளோபல் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தலைமை ஆலோசகர் ஆன டாக்டர் ஜெகத் ஷா பேசுகையில்,

கொங்கு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள்,சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்பங்களில் உள்ள புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த நிகழ்வு பயனுள்ளதாக அமையும் எனவும், கொங்குநாட்டு பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களோடு இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த சர்வதேச கண்காட்சி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் இதில் சர்வதேச அளவில் பெயர் பெற்ற அங்கீகாரம் பெற்ற கொங்கு நாட்டு வணிகர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க