• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை

June 12, 2018 தண்டோரா குழு

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரி,கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினருக்கும்,காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரியும்,ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த கோரியும்,இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக அவ்வமைப்பினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது,இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க