• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன்முறையாக நடைபெற்ற தொழிற்சாலை திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம்

May 18, 2019 தண்டோரா குழு

கோவையில் முதன்முறையாக நடைபெற்ற தொழிற்சாலை திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை திடக்கழிவுகளை தொழிற்சாலைகளிலேயே எரிபொருளாகவோ அல்லது மூலப்பொருளாகவோ பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. கோவையில் முதன்முறையாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் கொங்கு மண்டலங்களை சேர்ந்த கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உட்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் மணவண்ணன்,மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக இக்கருத்தரங்கை கோவை மண்டல மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் அலுவலர் நளினி துவக்கி வைத்தார்.

இதில் பேசிய அவர்,

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறது. இதை தடுக்க தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகளை பாதுகாப்பான மறு சுழற்சி செய்ய மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை சங்கத்தின் சுரேஷ் மனோகரன்,

தமிழகத்தில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பல்வேறு துறை தொழிற்சாலையினர் இதில் உறுப்பினராக இருப்பதாகவும் நாட்டிலேயே முதன் முறையாக துவங்கப்பட்ட இந்த சங்கத்தின் வாயிலாக தொழிற்சாலை திடக்கழிவுகள் கண்டறியப்பட்டு,மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசின் உதவியுடன் திடக்கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு பொது அமைப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க