• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முகமூடி அணிந்தபடி வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிம் மனு

February 28, 2020

கோவை மாவட்டத்தில் விளைநிலங்களில் வனவிலங்குகள் பிரச்சினைக்கு மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி முன்வைத்த தீர்வுகளை செயல்படுத்த கோரி சிவசாமியின் முகமூடி அணிந்தபடி வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர்,மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமியின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்து மனு அளித்தனர். வனவிலங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர் . எனவே தொடரும் வன விலங்குகள் பிரச்சனைக்கு மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி அவர்கள் முன்வைத்த
வனத்துக்கு வெளியே வரும் காட்டு யானைகளை சுட்டு விரட்ட வேண்டும்,பிற விலங்குகளை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்ற தீர்வை நடைமுறை படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் விளை நிலங்களில் மயில்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாகவும் , சிறுத்தை உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி முன்வைத்த தீர்வை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க