• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மீண்டும் மிரட்டும் கொரோனா வைரஸ்

June 13, 2020 தண்டோரா குழு

கோவையில்ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், நோயாளிகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், கொரோனா இல்லாத மாவட்டமாக 20 நாட்களுக்கும் மேலாக கோவை இருந்து வந்தது. ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பின், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கோவை வருபவர்களால், கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதுாக்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கோவை, உடையாம்பாளையத்தை சேர்ந்த 69 வயது முதியவர், ரத்தினபுரியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, வெள்ளக்கிணர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், திருப்பூர் மாவட்டம், தெக்கலுாரை சேர்ந்த எய்ட்ஸ் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட 48 வயது ஆண், காரமடையை சேர்ந்த 30 வயது பெண், கோவை கணபதியை சேர்ந்த 23 வயது பெண், விருது நகர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண், திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த 24 வயது பெண் ஆகியோருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோக, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சிறுநீரகப்பை வெளியே வந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார். அதில், குழந்தை வயிற்றிலேயே இறந்தது, தெரியவந்ததை அடுத்து உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

பின்னர், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுபோக, கோவைப்புதுார் சிறப்பு காவல்படையில் பணியாற்றி வரும் காவலரின் மனைவியுடன் தொடர்புடைய, பெண்ணின் தாய்,48. மற்றும் அருகில் வசிக்கும் 25 வயது பெண்ணுக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுபோக, விமானம் மூலம் கோவை வந்த, பிற மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க