• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மினி லாரி மோதி 9- ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி

November 18, 2019

கோவை தொண்டாமுத்தூர் அருகே மினி லாரி மோதி 9- ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

கோவை வடவள்ளி நவாவூர்‌பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் பி.பி.மொகந்தி (45) இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள செயற்கை கால் பெறுத்தும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நயன்மொந்தி (14) சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருந்து உள்ளார். காலை 11 மணியளவில் ரோட்டின் எதிரே உள்ள மளிகை கடைக்கு பொருள் வாங்க சாலையை கடக்க முயன்ற பொழுது அங்கு கணுவாயிலிருந்து நவாவூர் நோக்கி வந்த சரக்கு மினி லாரி மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லூம் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தந்தை வடவள்ளி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க