• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாணவரின் பிறப்புறுப்பை காயப்படுத்திய தலைமை ஆசிரியர் மீது புகார்

December 13, 2019

பீகார் மாநிலத்தை சேர்ந்த கேம்ராம் சிங் என்பவர் கோவை அடுத்த சூலூர் விமான படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள கேந்திரியா வித்யா பள்ளியில் 11 மற்றும் 9 வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகனாதன் இருவரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு, தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் தமிழரசி, திவ்யா, மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் உதித்குமார் சிங்கின் கைகளை பிடித்துக்கொள்ள , தலைமை ஆசிரியர் மேகநாதன் மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து இழுத்து காயம் ஏற்படுத்தியதோடு, ஆசன வாயிலில் விரலா குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள், நடந்தவற்றை தாய் சீமா குமாரியிடம் கூற, இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, இரண்டு குழந்தையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.ஏற்கனவே தலைமை ஆசிரியர் மேகனாதன் இது போல், பல முறை இந்த மாணவர்களிடம் தவறாக நடந்து வந்த போது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்களின் அம்மா சீமா குமாரி புகார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க