• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மழை மக்கள் மகிழ்ச்சி

March 6, 2017 தண்டோரா குழு

கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் திங்கள் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததோடு கடுமையான வெப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக திடீரென மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் திருப்பூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திங்கள் காலை முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க