• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மர்ம சூட்கேசால் பரபரப்பு

February 14, 2022 தண்டோரா குழு

குண்டு வெடிப்பு தினத்தில் காலியாக கிடந்த மர்ம சூட்கேசால் காந்திபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் தமிழக சிறப்பு அதிரடிப்படை, வெள்ளலூரில் உள்ள மத்திய அதிவிரைவுப்படை போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அசாம்பவிதங்கள் ஏற்பட்டால் கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் சீருடை அணியாத போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்திற்கு அடியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக அதனை யாரும் எடுக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் எந்த பொருட்களும் இன்றி காலியாக கிடந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். குண்டு வெடிப்பு தினத்தில் காலியாக கிடந்த மர்ம சூட்கேசால் காந்திபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க