• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மருந்துக்கடைகள் அடைப்பால் 300 கோடி ரூபாய் இழப்பு

April 3, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற  மருந்துகடைகள் அடைப்பு போராட்டத்தால் 300 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மருந்துகடை சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மருந்துகடை சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வம்,

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டதாகவும்,300 கோடி ரூபாய் வரை இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.மேலும் வருகிற ஐந்தாம் தேதி திமுக அறிவித்து உள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது எனவும்,ஏற்கனவே இன்று  நடைபெற்ற போராட்டத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இன்றே தங்களது ஆதரவை காவேரி விவகாரத்திற்காக தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார்.மேலும்,மருந்து கடைகள் இன்று அடைத்து இருந்தாலும் அத்யாவசிய தேவைக்கான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

 

மேலும் படிக்க