• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மரத்தில் மோதிய கார் – இருவர் பலி

January 13, 2021 தண்டோரா குழு

ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் பிகாம் மூன்றாம் ஆண்டு கற்பகம் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் இவரது உறவினரான அனந்தராமன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் ஆலாந்துறையிலிருந்து அவர்களது அத்தையை சென்னனூரில் விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும்போது சிறுவாணி சாலையில் சிவசக்தி திருமண மண்டபம் அருகேயுள்ள சாலையின் இடதுபக்கத்தில் இருக்கும் வாகை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சஞ்சீவ்குமார், அனந்தராமன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறு மணியளவில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பேரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க