December 19, 2019
முதல்வர் , துணை முதல்வர் கோவை வரும் போது மனித வெடி குண்டாக வருவேன் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்த பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அழைத்து பெண் ஒருவர் முதல்வர், துணை முதல்வர் கோவை வரும் போது மனித வெடிகுண்டாக வருவேன் என மிரட்டல் விடுத்து விட்டு சிம் கார்டை வீசி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது அப்பெண் கோவை செட்டிபாளையம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (47) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 1990 – 97 வரை இவர் அதிமுக மகளிர் அணியின் முக்கிய பொருப்பில் இருந்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.