• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம்

July 5, 2018 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள சாக்கு வியாபாரி சங்க அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டமானது இன்று(ஜூலை 7)நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகர குடிநீர் விநியோகித்தினை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் கம்பெனிக்கு கொடுப்பதற்கு கண்டனங்களை தெரிவித்து போராட்டங்கள் நடத்தபோவதாகவும்,
கோவை ஆத்துப்பாலம் முதல் ஒப்பனகார வீதி வரை மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் குறித்த உண்மையான வரைப்படத்தை மக்களின் பார்வைக்கு வெளியிடுமாறும்,இல்லையென்றால் மனித நேய மக்கள் கட்சி சார்பாக மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.

இச்செயற்குழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மத்திய பகுதியின் தலைவர் முகமது இப்ராஹிம்,செயலாளர் அலாவுதீன் மற்றும் ஆஷிக் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க