• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம்

July 5, 2018 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள சாக்கு வியாபாரி சங்க அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டமானது இன்று(ஜூலை 7)நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகர குடிநீர் விநியோகித்தினை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் கம்பெனிக்கு கொடுப்பதற்கு கண்டனங்களை தெரிவித்து போராட்டங்கள் நடத்தபோவதாகவும்,
கோவை ஆத்துப்பாலம் முதல் ஒப்பனகார வீதி வரை மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் குறித்த உண்மையான வரைப்படத்தை மக்களின் பார்வைக்கு வெளியிடுமாறும்,இல்லையென்றால் மனித நேய மக்கள் கட்சி சார்பாக மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.

இச்செயற்குழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மத்திய பகுதியின் தலைவர் முகமது இப்ராஹிம்,செயலாளர் அலாவுதீன் மற்றும் ஆஷிக் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க