• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் தற்கொலை முயற்சி

April 2, 2018 தண்டோரா குழு

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று(ஏப் 2) திமுகவினர் இருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சாலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பிரதமர் மோடி மோசடி செய்ததை கண்டித்து தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு பல்வேறு கட்யினர் கைதாகி வருகின்றனர்.

நீண்ட வருடங்களாக சட்டப்போராட்டத்தின் விளைவாக ஆறுவாரகாலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் காலக்கெடு முடிந்த பின்னும் மத்திய மோடி அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழகத்தின் வாழ்வாதரமான காவிரி விவகாரத்தில் மோடி அரசு மோசடித்தனம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் திமுகவின் 39 வட்ட கழக செயலாளர் பி.டி.முருகேசன் மற்றும் சிங்கை சதாசிவம் இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள பீளமேடு சிக்னல் அருகே ஒடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் இருவரையும் பிடித்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடிங்கி அவர்களை கைது செய்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.தீ குளிக்க முயன்றவர்களை தடுக்க முற்பட்ட போது காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

மேலும் படிக்க