• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மது போதையால் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை

November 5, 2018 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் மது போதையால் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கணபதி அடுத்த பதிகவுண்டர் தோட்டம் அருகே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை , வழிமறித்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தலையில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர், கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரவின் குமார் என்றும், மது போதையில் ஏற்பட்ட தகராறில் பிரவின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனறும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினத் பிரவின் குமாரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல கணபதி அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பணியாற்றி வரும் ஒடிசா மாநில தொழிலாளர்களிடையே நேற்று இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் சச்சின்(30) என்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் க கல்லால் அடித்து கொலை செய்யப்ட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வடமாநில தொழிலாளர்கள நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க