January 7, 2020
தண்டோரா குழு
கோவை மத்திய பேருந்து நிலையத்தில் போலீஸ் என கூறி பணம் பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சிவகுமார் வயது 35 கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சிவகுமாரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்து தப்பிச் சென்றனர் அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அந்த ரெண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபுதாகிர் வயது 40 மேட்டுப்பாளையம் காட்டூர் சேர்ந்த ஆனந்த் 55 என்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.