• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர் கைது

April 8, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பேரூர் அருகே உள்ள சின்னக் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் வயது 44. இவர் பாரத் சேனா இளைஞர் அணி மாநில அமைப்பாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் சோதனை சாவடி வழியாக வந்து கொண்டிருந்தார் சோதனை சாவடியில் செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஜெகதீசன் மோட்டார் சைக்கிளை சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தடுத்து நிறுத்தினார். எங்கு செல்கிறீர்கள் வெளியே வரக்கூடாது என 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்று கேட்டனர்.அதற்கு அவர் சும்மா தான் வெளியே வந்தேன் என்று சப் இன்ஸ்பெக்டரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெகதீஷ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் தொற்றுநோய் தடுப்பு சட்டம் தடை உத்தரவை மீறுதல்உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க