• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போலி முத்திரை தயாரித்ததாக திமுக ஒன்றிய செயலாளர் கைது!

November 3, 2018 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே போலி ஆவணம், போலி முத்திரை தயாரித்து மோசடி செய்ததாக திமுக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாமாகோபிநாத் என்பவர் சேனாதிபதி மற்றும் வீரகேரளத்தை சேர்ந்த இருவரிடம் சோமையாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 1 ஏக்கர் நிலம் வாங்கியும், அதே பூமியை வீடுமனைகள் கட்டி விற்க, நேரு நகர் என்ற பெயரில் திமுக ஒன்றிய செயலாளர் சேனாதிபதி என்பவர் 23 வீட்டு மனைகளாக பிரித்து அதில் 10 வீட்டுமனைகளை விற்று உள்ளார். அதில் வீட்டுமனைகள் வரன்முறை படுத்தப்படாமல் இருந்ததை வரன்முறைபடுத்தப்பட்டதாக சேனாதிபதி போலியாக ஆவணங்களை தயாரித்து அதில் போலியாக தயாரித்த முத்திரைகளையும் பயன்படுத்தி அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கப்பட்ட ஆணையாக கையொப்பம் செய்து போலியாக உருவாக்கி அதில் வீடுகட்டி விற்பனை செய்து உள்ளார்.

இந்நிலையில் போலி ஆவணம், போலி முத்திரை தயாரித்து மோசடி செய்ததாக திமுக ஒன்றிய செயலாளர் மீது பெரியநாயக்கன் பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் சேனாதிபதி என்பவரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைக்க உள்ளனர்.

மேலும் படிக்க