• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போராட்டத்துடன் புத்தாண்டை வரவேற்ற இஸ்லாமியர்கள்

December 31, 2019

கோவையில் தேசியகொடி, மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றும், தேசிய கொடியை கையில் ஏந்தியும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பங்கேறனர். எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தை முன்நின்று நடத்தினர்.

உக்கடம் மத்திய சாலையில் தொடங்கி டவுன்ஹால் சாலை வரைக்கும் பேரணியாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் கோரிக்கைகள் முன்நிறுத்தியும் போராட்டத்தை நடத்தினர். மேலும் மத்திய,மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டது. இரவு 11.30 மணிக்கு தொடங்கிய போராட்டமானது 12.15 வரைக்கும் நடைபெற்றது. ஊரே புத்தாண்டை வரவேற்று பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடி வரும் சூழ்நிலையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் CAA, NRC க்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தினர். பலத்த போலிஸ் பாதுகாப்பு அமல்படுத்தபட்டது.

மேலும் படிக்க