• Download mobile app
11 Aug 2025, MondayEdition - 3470
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

January 5, 2022 தண்டோரா குழு

கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.மிரட்டல் விடுத்த அழைப்பேசி எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, உக்கடம் குளமும் வெடிகுண்டு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குனியமுத்தூரை சேர்ந்த பீர்முகமது என்பதும், அவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
பீர்முகமதுவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளிலும் மெரினா கடற்கரை உட்பட இடங்களில் இதேபோன்று போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க