• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போதைக்காக சானிடைசர் குடித்த வாலிபர் உயிரிழப்பு

April 11, 2020 தண்டோரா குழு

கோவையில் போதைக்காக சானிடைசர் குடித்த சிலிண்டர் சப்ளை செய்யும் வாலிபர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெர்னார்ட் கடந்த இரண்டு நாட்களாக சானிடைசர் குடித்து வந்து உள்ளார். மேலும் உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து சானிடைசர் மட்டுமே போதைக்காக குடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க