• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போக்குவரத்து நெரிசலில் உல்லாச தூக்கம் போட்ட நபர்

February 21, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரை நிறுத்திவிட்டு குடி போதையில் காருக்குள்ளேயே உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் நீண்ட நேரம் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் முன்னிலையில் பொதுமக்கள் திரண்டு நீண்ட நேரம் காருக்குள் தூங்கிய நபரை எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் கார் கண்ணாடியை உடைத்து குடிபோதையில் இருந்த நபரை வெளியேற்றினர்.

விசாரணையில் போதையில் இருந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வரும் நிலையில்,மன உளைச்சலால் காலையிலேயே அதிகளவிலான மது அருந்தி வாகனத்தை ஓட்டி விபத்து உண்டாக்கி பின்னர் வாகனம் ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி உறங்கியது தெரியவந்துள்ளது.

போலீசார் அவர் மீது ட்ரங் அண்டு டிரைவ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க