• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போகி பண்டிகையை ஒட்டி பெரியாரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சி

January 13, 2021 தண்டோரா குழு

கோவையில் போகி பண்டிகையை ஒட்டி இந்து மக்கள் கட்சியினர் பெரியாரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகையையொட்டி இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சித்தனர்.

அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சிவத்திரு பிரசன்ன ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியாரின் கடவுள் மறுப்பு,பெண் ஏன் அடிமையானாள் உள்ளிட்ட அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்திவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர். அப்போது போலீசார் இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் பிரசன்ன ஸ்வாமியை கைது செய்து அழைத்து சென்றனர்.இச்சம்பவத்தால் அசோக் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க