• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பற்றி எரிந்த 15 ஏக்கர் பயிர்

March 4, 2020

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 15 ஏக்கர் பயிர் பற்றி எரிந்தன.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் கவுசிகா நதி அணைக்கட்டு அருகே பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தீயிட்டு வந்தது.இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நவீன் என்பவர் மாவட்ட ஆட்சியர், வேளாண் துறையிடம் தொடர் புகார் அளித்து வந்தார்.இந்நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் இன்று மீண்டும் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்துள்ளனர். இந்த தீ வேகமாக பரவி நந்தகோபால் என்பவரது தோட்டத்திற்குள் பரவியதால் சுமார் 15 ஏக்கர் பரப்பில் போடப்பட்ட சோளத்தட்டுப்பயிர்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை தொடர்ந்து போராடி தீயை அணைத்ததால் பட்டியில் கட்டி வைத்திருந்த 40 மாடுகள் உயிர் தப்பியது.உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க