• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்த வாலிபர்

January 22, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாய் கணேஷ் என்பவர் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

அண்மையில் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தியதை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாய் கணேஷ் என்பவர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தனது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

சென்னையை சேர்ந்த சாய் கணேஷ் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக சாய்கணேஷ் தெரிவித்தார். சாய் கணேஷின் இந்த செயலுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஒரு சிலர் பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க