• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெற்றோரை ஒருமையில் பேசிய போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்

June 22, 2020 தண்டோரா குழு

கோவையில் பள்ளி சிறுவன் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருபவர் வேல்மயில். இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை உடனடியாக மூடும்படி அறிவுறுத்தினார். ஆனால் வேல்மணியும் அவரது மனைவியும் கடையை எடுக்காமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர்களை ஒருமையில் பேசிய உதவி ஆய்வாளர் செல்லமணி, அவர்களின் செல்போனை பிடுங்கி கொண்டு உடனடியாக கடையை காலி பண்ண வேண்டும் என எச்சரித்தார். அப்போது தனது பெற்றோரை ஒருமையில் காவல்துறையினர் பேசுவதை கண்டு ஆவேசமடைந்த பள்ளி மாணவர், உதவி ஆய்வாளர் செல்லமணியின் இருசக்கர வாகன சாவியை பிடுங்கி கொண்டு கைகலப்பில் ஈடுபட்டார்.

இதனையடுத்து போலீசார் சாவியை பிடுங்கிய பள்ளி மாணவரை லத்தியால் தாக்கினர். காவல்துறையினர் தங்களது மகனை தாக்குவதை கண்டு கலங்கிய பெற்றோர் காவல்துறையினரை தடுத்து , மகனை தாக்க வேண்டாம் என கெஞ்சினர். சிறுவனின் தாய் சாலையில் அமர்ந்து கொண்டு கதறினார். இந்த பாச போராட்டத்தால் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவனை போலிஸ் வாகனத்தில் ஏற்றி, இரத்தினபுரி காவல் நிலையம் அழைத்து சென்றனர் . பின்னர் மாணவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து மாணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தனர். அப்போது மாணவர் சராசரியாக படிக்க கூடியவர் எனவும், பெற்றோர் மீது அதிகப் பாசம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உயர் அதிகாரிகளின் அறிவுரையின் பேரில், பள்ளி மாணவனின் எதிர்காலம் கருதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து , அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். மேலும் பள்ளி மாணவனின் தந்தை வேல்மயில் மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துவதாக ( IPC 75) சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விடுவித்தனர். பள்ளி சிறுவன் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

மேலும் படிக்க