• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெரிய வெங்காயம் விலை விரைவில் குறையும் வியாபாரிகள் நம்பிக்கை

November 8, 2019 தண்டோரா குழு

கோவையில் பெரிய வெங்காயம் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் விலை விரைவில் குறையும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளன இந்த மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து உள்ளது. தினமும் 700 முதல் 800 டன் வரை பெரிய வெங்காயம் வரத்து இருக்கும். இந்நிலையில் மகாராஷ்டிரா கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

கோவைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது தினமும் 400 டன் மட்டுமே வந்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் முதல் முறையாக பெரிய வெங்காயத்தின் விலை கோவை மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி உச்சத்தைத் தொட்டது. அதன்படி மொத்த விற்பனையில் கிலோ ரூபாய் 70 க்கும் விற்பனை செய்யப்பட்டது சில்லரை விற்பனை 90க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் கிலோ 55க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை வரும் வாரங்களில் படிப்படியாகக் குறையும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.

மேலும் படிக்க