November 21, 2019
தண்டோரா குழு
தென்னிந்திய சந்தையை வலுப்படுத்தும் விதமாக கோவையில் பெப்பர்ப்ரை புதிய பர்னிச்சர் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பர்னிச்சர் என்பது வீட்டிற்கு தேவையான மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த பர்னிச்சர் என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் ,அலுவலகங்கள், ஹோட்டல்களில் அதிகம் இருக்கின்றது. இந்நிலையில், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பர்னிச்சர் விற்பனை போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக பெப்பர்ப்ரை கோவையில் தனது புதிய ஷோரூமை திறந்துள்ளது. கோவையில் இந்த எஸ்.எஸ்.வி.வி.ஆர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து பீளமேட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பிடித்தவாறு வீட்டில் இருந்தபடியே தேவையான பொருட்களை ஆன்லைன் முறையில் பார்த்து தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம்.
இது குறித்து இந்நிறுவனதின் தலைமை அதிகாரி ஹூசைன் கோரி கூறுகையில்,
எஸ்.எஸ்.வி.வி.ஆர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் எங்கள் புதிய ஷோருமை`நாங்கள் திறப்பதன் மூலம் எங்களின் ஓம்னி சேனல் நெட்வொர்க் விரிவடைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பர்னிச்சர் பொருட்களை வாங்குவோர்களுக்கு இலவச முறையில் டோர் டெலிவரி செய்வதுடன் சேதாரம் ஆகும் பொருட்களுக்கு இந்த பெப்பர்ப்ரையே சரி செய்து தருவதாக தெரிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் உள்ள பெப்பர்ப்ரை ஸ்டுடியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்பு செய்வதாகவும் குறைந்த விலையில் பர்னிச்சரை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.