• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புகழ் வாய்ந்த சாய்பாபா கோவிலில் 77 வது தரிசன விழா

January 7, 2020 தண்டோரா குழு

கோவையில் புகழ் வாய்ந்த நாகசாயி மந்திர் என அழைக்கப்படும் சாய்பாபா கோவிலில் 77 வது தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பல்வேறு சிறப்புகளை கொண்ட சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது.சாய்பாபா பாதுகை விழா, நூற்றாண்டு விழா என பல்வேறு விழாக்களை கோவிலின் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிர்வாகத்தினர் திறம்பட செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலின் வரலாற்று சிறப்பு மிக்க 77 வது தரிசன விழா சாய்பாபா கோவில் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை காகட ஆரத்தி துவங்கி ஹோமம்,பூர்ணாஹுதி,மற்றும் நாகசாயி பஜன் நடைபெற்றது.

தரிசன விழாவின் சிறப்பு குறித்து கோவில் துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர்
பேசுகையில்,

கடந்த 1943 ஆம் ஆண்டு கோவிலில் சாய்பஜனை நடைபெற்று கொண்டிருக்கும் போது, சத்குரு ஸ்ரீ சாய்பாபா படத்திற்கு முன்பு தோன்றிய நாகரூபம் சுமார் பதினேழரை மணி நேரம் அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி தந்ததோடு,பஜனை பாடல்களுக்கு ஏற்ற படி அசைந்து ஆடி பக்தர்களை பரவசமடைய செய்தது. இந்த நிகழ்ச்சி முதல் இந்த ஆலயம் நாகசாயி எனும் சிறப்பை பெற்றதால், இந்த தரிசன விழாவை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து பேசுகையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது அறங்காஙலர் சுகுமார் உடனிருந்தார்.

மேலும் படிக்க