• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரத்யேக மேக்கப் கலை பயிற்சி ஸ்டுடிய – தொழில் முனைவோராக ஆர்வம் காட்டும் பெண்கள்

June 28, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த வைஷ்ணவி வைஷூஸ் (Vaishu’s) Bridal Studio & Academy வாயிலாக மணப்பெண்களுக்கான பிரத்யேக மேக்கப் குறித்த பயிற்சியை 20 நாட்களில் வழங்கி,பெண்களை தொழில் முனைவோராக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கோவையை சேர்ந்தவர் வைஷ்ணவி. பெண்களுக்கான மேக்கப் கலையில் ஐந்து வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், மேக்கப் மற்றும் சிகை அலங்கார துறையில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில் மேக்கப் துறையில் சிறந்த தொழில் முனைவோராக பெண்களாலும் சாதிக்க முடியும் எனும் வகையில், தடாகம் சாலையில்,அரசு தொழில் நுட்ப கல்லூரி எதிரில், Vaishu’s Bridal Studio & Academy எனும் மையத்தை துவக்கியுள்ளார். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேக்கப் ஸ்டுடியோ வாயிலாக இருபது நாட்களில் மேக்கப் கலை குறித்த பயிற்சி அளித்து,மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழை வழங்குகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சிறு வயது பெண்கள் முதல் வயது வித்தியாசமின்றி பெண்கள் மேக்கப் துறையில் ஆர்வம் காட்டுவதாகவும், சாதாரண மேக்கப் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மணமகளுக்கு மேக்கப் செய்வதற்கான பயிற்சியை 20 நாட்களில் வழங்கி சிறந்த மேக்கப் கலைஞர்களாக உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.

மேக்கப் துறையில் தற்போது வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அதிக பெண்கள் இதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். தகவல்களுக்கு 9677691591 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேக்கப் கலை பயிற்சி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க