January 7, 2020
கோவை ஆனைகட்டியில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழ்ந்த நீலகிரி உயிர்கோள இயற்கை பூங்காவை பாதுகாக்க கோவையில் நிதி திரட்டும் ‘ ஊ லா லா! இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
கோவை அ௫கே ஆனைகட்டியில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நீலகிரி உயிர்கோள இயற்கை பூங்காவானது இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பலவிதமான விலங்குகள், மரங்கள், அரிதான தாவர இனங்கள் இங்கு உள்ளன. இந்த பூங்கா இந்த பிராந்தியத்தின் மண்ணிற்கு ஏற்ற 450க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பூர்விக மரங்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்து வ௫கிறது. மேலும் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த பூங்காவிற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்துள்ளனர் இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள். மேலும் இங்கு ஒ௫ தாவர நாற்றுப் பண்ணையும் உள்ளது பார்வையாளர்கள் இங்கு விதை பந்துகள் மற்றும் தாங்கள் வி௫ம்பும் தாவர செடிகளையும் வாங்கி செல்லலாம் மேலும் இங்கு 100க்கும் மேற்பட்ட வகையான பாலூட்டிகள்,350க்கும் மேற்பட்ட வகையான பறவையினங்கள், 80க்கும் மேற்பட்ட ஊர்வன, 31க்கும் மேற்பட்ட நீர் நில வாழ் உயிரினங்கள், 39க்கும் மேற்பட்ட மீன் இனங்கள், 316க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் இன்னும் பலவகையான உயிரினங்கள் இங்கு உள்ளன.
இந்நிலையில்,இவைகளை பராமரிப்புக்கு தேவையான நிதியை திரட்ட கோவையில் ‘ ஊ லா லா! என்னும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹரிசரண்,ஆனந்த் அரவிந்த்தா௯ன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொள்கிறார். மேலும், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவையில் நடைபெற்றது. இதில்பூங்கா குழு தலைவர் எஸ் வி பாலசுப்பிரமணியம், துணை தலைவர் விஜய்மோகன், பொ௫ளாளர் மற்றும் செயலாளர் ரங்கசாமி மற்றும் ஆர் நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது.