February 18, 2020
தண்டோரா குழு
ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் தொழிலதிபரான கிம். தன் மன நிம்மதிக்காக இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையிலுள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வந்துள்ளார். அங்கு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார். ஆனாலும் மனநிம்மதி கிடைக்காததால், பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டு பெற்று வருகிறார்.
கோவை ரயில் நிலையத்திற்கு வரும், பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து, அவர்கள் கொடுக்கும் ஐந்து, பத்து ரூபாய் பணம் பெற்று, அதில் உணவு வாங்கி உட்கொண்டு வருகிறார். இதன் மூலம் மன நிம்மதி கிடைப்பதாக, கிம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் மனம் சாந்தி அடைகிறது என்றும் அவர் கூறுகிறார்.
வெள்ளைக்காரர் ஒருவர் பொதுமக்களிடம் பிச்சை கேட்டு சுற்றித்திரிவது கோவை மக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.