December 18, 2019
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் குழந்தைகள்தோழமை நீதிமன்ற அறை போன்றவற்றை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத்தார்.இதில் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் ,தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் காவல்துறையினர் என பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இதை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தீர்வு செய்வதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று பாலியல் கென்றே விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.