• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் வாபஸ்

October 29, 2022 தண்டோரா குழு

கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து, வருகின்ற 31ம் தேதியன்று கோவை மாநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷணன் அறிவித்தார்.இந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அப்போது கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முழு அடைப்பு நடத்தினால் சட்டப்படி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகர வியாபாரிகளும், தொழில் முனைவோர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலணை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி அண்ணாமலை கோவை மாவட்ட பாஜக தலைவர்களுடன் உரையாடி கோவை மாநகர மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதால், அதனை ஏற்று 31ம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க