• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பழமைவாய்ந்த மாகாளியம்மன் கோவிலின் 97வது ஆண்டு பிரம்ம உற்சவ திருவிழா

December 28, 2021 தண்டோரா குழு

பழமைவாய்ந்த மாகாளியம்மன் கோவிலின் 97வது ஆண்டு பிரம்ம உற்சவ திருவிழா கால்கோலுடன் துவங்கியது.

கோவை டவுன்ஹால் என்.எச் ரோட்டில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 97வது ஆண்டு பிரம்ம உற்சவ திருவிழா நடைபெறுகிறது.இதில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ,மற்றும் திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்திநகர் சீனிவாசன்,பகுதி கழக செயலாளர் பக்ருதீன், கிளை செயலாளர் வி.எச் ரோடு விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால் கோல் நடுதலுடன் மேல தாலங்களுடன் உற்சாகமாக இன்று விழாவை துவக்கி வைத்தனர்.

ஜனவரி 1ஆம் தேதி காஞ்சிமா நதியிலிருந்து அம்மன் சிங்க வாகனத்தில் ஆனந்தமாய் எழுந்தருளச் செய்து கரக ஸ்தாபனத்துடன் ஊர்பவனி வந்து கோவிலில் சேர்ப்பித்தல், அம்மனுக்கு மலர் பூஜைகள், அக்னி சட்டி பூ இறைத்தல்,குத்து விளக்கு பூஜை, பூச்சட்டி எடுத்து மஞ்சள் நீராடுதல், மாவிளக்கு எடுத்தல் என ஜனவரி 10-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

இந்த கால்கோல் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமியை வழிபட்டனர்.

மேலும் படிக்க